பாடம் மட்டுமே படிப்பல்ல... வாழ்க்கைக்குத் தேவையான தையும் சேர்த்து படிப்பதுதான் படிப்பு. அந்த வகையில் குழந்தை களுக்குக் கல்வியுடன், இயற்கை விவசாயம், நாட்டு விதைகளின் முக்கியத் துவத்தையும் கற்பித்து வருகிறது கோயம்புத்தூர், வீரபாண்டி பகுதியில் உள்ள புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி. அங்கு ஏராளமான நாட்டு ரக விதைகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் என்ற தகவல் கேள்விப்பட்டு, அவற்றைப் பார்வையிடு வதற்காகப் பள்ளிக்குச் சென்றோம்.