சென்னையைச் சேர்ந்த ஜெயஶ்ரீ கிருஷ்ணன் இயற்கை ஆர்வலர். நடிகை ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மாடித்தோட்டம் அமைத்துக்கொடுத்திருக்கும் இவர், தன் வீட்டில் மிகப்பெரியளவில் மாடித்தோட்டம் வைத்திருக்கிறார். அதில் ஏராளமான மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார். மாடித்தோட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மண் கலவை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த காணொளியில் விளக்குகிறார் ஜெயஶ்ரீ கிருஷ்ணன்.