திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், கோதுமைப் புல் வளர்த்து, அதை அரைத்துப் பொடியாக்கி அமேசான் மூலமாக விற்பனை செய்து வருகிறார்.
"உலகநாடுகளின் ‘super Food’ பட்டியலில் கோதுமைப் புல் ஜுஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை ‘பச்சை ரத்தம்’ என்றழைக்கின்றனர். மனித உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவுக்குக் கொடுப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் இதில் அதிகம் உள்ளதால் உலகளவில் கோதுமைப் புல்லுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது" என்று சொல்லும் ராஜ்குமார். கோதுமைப் புல வளர்ப்பு தொடர்பான தன் அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்...