உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பானம்... தேநீர். இதனால், தேயிலைக்கான சந்தை வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தி அதிகம் நடைபெறும் நீலகிரி மாவட்டத்தில், மிகக் குறைவான அளவிலேயே இயற்கை முறையில் தேயிலைச் சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, இயற்கை முறையில் தேயிலைச் சாகுபடி செய்து வருகிறார். தேயிலையை மரமாக வளர்த்து இலைகளைப் பறித்து, மதிப்புக்கூட்டல் செய்து நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.