"விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து நகரத்துலதான் வசிச்சேன். வேலைக்குப் போனபிறகும் அதே வாழ்க்கை முறைதான். அலாரம் வெச்ச மாதிரி ஒரே மாதிரியான வேலை. தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மன நிறைவுக்கான விஷயங்கள் எதுவுமில்லாததுபோல உணர்ந்தேன். ‘இது மட்டும்தான் வாழ்க்கையா’ங்கிற கேள்வி எனக்குள்ள உருவாச்சு. ஒரு கட்டத்துல அதுக்கான விடைதேட ஆரம்பிச்சேன். அதோட முடிவு இப்ப நானொரு இயற்கை விவசாயி’’ சிரித்தபடியே கூறும் முகேஷ் சேகரன், வேலையை விட்டுட்டு நகர வாழ்க்கையிலிருந்து விலகி, நீலகிரி மாவட்டத்தில் தனியாளாக விவசாயம் செய்து வருகிறார்.