வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் செவ்வாழைக்குத் தனி மவுசு உண்டு. இந்த ரக வாழைக்குச் சந்தையில் எப்போதும் அதிக தேவை இருப்பதால், விற்பனையும் எளிதாகிறது. அந்த வகையில், செவ்வாழையைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை விவசாயி முருகன்.