தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யோகேஷ்வரன் 33 சென்ட் பரப்பில் இயற்கை முறையில் குட்டை ரகப் புடலங்காய் சாகுபடி செய்து, நிறைவான வருமானம் பார்த்து வருவது இப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகில் இருக்கிறது இவரது தோட்டம்.