கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட ஆண்- வீடியோ

  • 6 years ago
கழுத்தை அறுத்தும் முகத்தை முழுவதும் சிதைத்தும் 40 வயது மதிக்கதக்க ஆண் கொலை போலீசார் யார் என விசாரணை நடத்திவருகின்றனர்

வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடி காங்கேயநல்லூர் சத்துவாச்சாரி வரையில் பாலாற்றில் ஒரு பாதை உள்ளது பாலாற்றின் உள்ளே அந்த பாதையில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கழுத்தை அறுத்தும் தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து கொடுரமாக கொலை செய்துள்ளனர் அந்த பகுதியாக வந்தவர்கள் பார்த்துகாவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இதன் அடிப்படையில் விருதம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பதும் தெரியவில்லை இதனால் விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவரின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் பாலாற்றில் இரவு நேரத்தில் அப்பகுதியில் பலர் அமர்ந்து மது அருந்துவது பழக்கம் இதில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா அல்லது வேறு எங்காவது இருந்து அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் முகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அடையாளம் காணவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The 40-year-old male murder suspect is investigating who is on the scene

Recommended