நடத்தையில் சந்தேகம் : மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறை காவலர்

  • 6 years ago
நெல்லை அருகே திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே நடத்தையில் சந்தேகமடைந்த சிறை காவலர், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், தென்கலத்தை சேர்ந்த சிறைக்காவலர் பாலகுரு, 1 மாதத்திற்கு முன்பு மதுரையில் இருந்து மாறுதலாகி பாளையங்கோட்டை சிறையில் சிறைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் வேலம்மாள் என்பவருடன் திருமணமாகி உள்ளது. அதற்குள்ளாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலகுரு, இன்று காலை திருச்செந்தூர் செல்ல வேண்டும் என தனது மனைவி வேலம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். பாளையங்கோட்டை பொட்டல் அருகே சென்று கொண்டிருந்த பாலகுரு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, வேலம்மாளின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி அவரே காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, பாளையங்கோட்டை மற்றும் தாழையூத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended