முதுநிலை காவலர் கல்லால் அடித்து கொலை, டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை

  • 6 years ago
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதுநிலை காவலர் மோகன்ராஜ் நேற்று பணிமுடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, திருமங்கலம் - கண்டிகை சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திய காவலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு மது அருந்த வந்த மர்மநபர்கள் சிலருக்கும், காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், காவலரை கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த முதுநிலை காவலர் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார் சத்திரம் போலீசார், காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மோழி மற்றும் எஸ்.பி சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended