மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது
  • 6 years ago
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்தவர் ரமேஷ். 2 மாதங்கள் முன்பு மரணமடைந்தார். இவரது மகன் ரஞ்சித் (19). கிண்டி தொழில் நுட்பக் கல்லூரியில் ஐ.டி.ஐ படித்து வந்தார். இந்நிலையில் இவர் ஜனவரி 19ம் தேதி இரவு குளக்கரை சாலை -ஷெனாய் சாலை சந்திப்பில் கத்தி குதித்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரவு 11.45 மணி அளவில் கடைசியாக தனது தாயார் சரஸ்வதியிடம் பீச் ரயில் நிலயத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டு இருப்பதாக போனில் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


Three persons have been arrested in connection with the murder of a student at Nungambakkam railway station, in Chennai.
Recommended