பட்டப்பகலில் இளைஞர் கழுத்தை அறுத்து கொடூர கொலை- வீடியோ

  • 6 years ago
பட்டப்பகலில் இளைஞர் கழுத்தை அறுத்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் தெற்க்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிவா குமார் சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவருக்கும் இவரது உறவினரான வைதீஸ்வரன் என்பவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்ப்பட்டுள்ளது.இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த சிவகுமாருக்கும் வைதீஸ்வரனுக்கும் மீண்டும் குடும்ப தகராறு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் இன்று காலை அதே பகுதியிலுள்ள ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்க சென்ற சிவகுமாரை பின்னால் வந்து சட்டை காளரைபிடித்து இழுத்து கீழே தள்ளி தான் ஏற்க்கனவே கொண்டுவந்த அரிவாளால் சிவகுமாரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடினார் இதில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் கொலையாளி வைதீஸ்வரனை கைது செய்து கேணிக்கரை போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Recommended