ஒருவழியாக கரியை உபயோகப்படுத்தும் இஸ்திரி பெட்டியிலிருந்து பல சலவை தொழிலாளிகளுக்கு தற்போது விடிவு காலம் பிறந்திருக்கிறது. கரியை அள்ளி இஸ்திரி பெட்டிக்குள் திணித்து, அதனை பற்றவைத்து கங்கு வரும்வரை சூடேற்றி, அதை அணையாமலும், அனல் குறையாமலும் பார்த்துக் கொண்டே தங்கள் வாழ்நாளை கழித்து மறைந்தே போன சலவை தொழிலாளிகள் லட்சத்திற்கும் மேல். இப்போதும் இந்த கரியை கொண்டுதான் பலர் சலவை துணிகளை தேய்த்து வருகிறார்கள்.