Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/21/2017
அதிமுகவில் ஈபிஎஸ் அணியுடன் இணைந்த போதும் ஓபிஎஸ் அணி தலைவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் லேசாக இருந்த அதிருப்தி குரல் இப்போது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு வருவதால் அதிமுகவில் மீண்டும் ஒரு "தர்மயுத்தம்" நடைபெற வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

முதல்வர் பதவியில் இருந்து தம்மை ராஜினாமா செய்ய வைத்ததைக் கண்டித்து சசிகலாவுக்கு எதிராக திடுதிப்பென போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் தியானம் செய்துவிட்டு தர்மயுத்தத்தை தொடங்கியிருப்பதாக பிரகடனம் செய்தார் ஓபிஎஸ்.
ஆனால் சசிகலா, தினகரன் அடுத்தடுத்து சிறைகளுக்கு போக... டெல்லியின் நெருக்கடி அதிகரிக்க... ஓபிஎஸ் அறிவித்த தர்மயுத்தமும் சட்டென முடிவுக்கு வந்தது. அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது.

sources said that AIADMK OPS faction will launch their Dharma yudham against the EPS Team

Recommended