தினகரனுக்கு போட்டியாக தனி இயக்கம் தொடங்கும் ஜெயானந்த்!

  • 6 years ago
தினகரனைத் தொடர்ந்து சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அதிமுகவை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தால் அதை தக்க வைக்க முடியவில்லை. டெல்லியின் பகீரத முயற்சிகளால் சசிகலா குடும்பத்தின் முதல்வர் கனவும் தகர்ந்தது.

எம்.எல்.ஏக்களை வளைத்துப் பார்த்தும் கூட முதல்வர் எடப்பாடியார் அரசை சசிகலா குடும்பத்தால் கலைக்க முடியவில்லை. ஆர்கே நகரில் பணத்தை வாரியிறைத்து சுயேச்சையாக தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்போதும் கூட ஆட்சியை கலைத்துவிடுவோம் என தினகரன் கூறிவந்தாலும் அது நடக்காது என்பது அவரது ஆதரவாளர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனிக்கட்சி தொடங்கி தமது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார் தினகரன். இதற்கான அறிவிப்பை நாளை வெளியிடுவதாக கூறியிருக்கிறார் தினகரன்.
தினகரன் இப்படி அறிவித்த நேரத்திலேயே சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனி இயக்கம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெய் ஆனந்த் திவாகரன் பதிவிட்டுள்ளதாவது:

"Maaveeran Subhas Chandra Bose Movement" was announced by Jeyanandh Dhivakaran from Sasikala family on Tuesday.

Recommended