ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்குக்கும் நோட்டாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நோட்டா பெற்றுள்ள வாக்குகளை கூட நெருங்க முடியாத நிலையில் பாஜக உள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்கு பின்னர் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்கு பின்னர் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.
ஒரு கட்டத்தில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் பாஜகவை விட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்றுள்ள நோட்டாவே முன்னிலையில் உள்ளது. தனது எதிரி நோட்டாதான் என்ற ரேஞ்சில் நோட்டாவுடன் சண்டைபோட்டு வருகிறது பாஜக.