ஜெ.-சோபன் பாபு மகள் எனும் அம்ருதா மீது தமிழக அரசு விரைவில் அவதூறு வழக்கு?- வீடியோ
  • 6 years ago
ஜெயலலிதாவுக்கும சோபன் பாபுவுக்கும் பிறந்த மகள் தாமே என அணுகுண்டை வீசும் அம்ருதா மீது தமிழக அரசு விரைவில் அவதூறு வழக்கு போடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அவர் குறித்த புனிதப் பிம்பத்தை உடைக்கும் வகையிலேயே செய்திகள் வெளியாகின்றன. ஜெயலலிதாவுக்கு மகள் இருக்கிறார் என்ற செய்தியைத் தாண்டி, இரண்டு குழந்தைகள் என்றெல்லாம் தகவல்கள் பரவுகின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் தான் ஜெயலலிதாவின் மகள். சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்துகொள்ளுங்கள்' எனக் கூறியிருப்பது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூதாதையர் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருந்தாலும் மைசூருவிலும் மாண்டியா அருகேயுள்ள மேல்கோட்டையிலும் வாழ்ந்தனர். மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதா, தந்தையின் மறைவுக்கு பிறகு பெங்களூருவுக்குச் சென்றுவிட்டார்.
சந்தியா நடிகையான பிறகு, ஜெயலலிதாவுடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். கர்நாடகாவில் வசிக்கும் சிலர், ஜெயலலிதாவின் அண்ணன்', 'ஜெயலலிதாவின் தங்கை' என்றெல்லாம் கிளம்பினாலும், அண்ணன் ஜெயக்குமாரை தவிர வேறு யாரையும் தனது ரத்த உறவுகளாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை

Sources said that TamilNadu Govt. will file a defamation case agains Amrutha who is claiming a daughter of Jayalalithaa.
Recommended