ஐபிஎல் 2018, வீரர்கள், மைதானத்திற்கு உச்சகட்டப் பாதுகாப்பு- வீடியோ

  • 6 years ago
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 3 வரை மத்திய அரசுக்கு வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Amidst opposition against ipl match at chennai today gunned police protection for cricket players and cricket board, police officials discussing of how to bring players safely to stadium.

Recommended