ராமரின் ரகு வம்சத்தின் கடைசி இவர்கள் தான்..வீடியோ

  • 6 years ago
நமது சிறுவயதில் இருந்தே நாம் அதிகம் கேட்ட, பார்த்த கதைகளில் ஒன்று இராமாயணம். இந்தியாவின் இரு காவியங்களில் மகாபாரதத்துடன் மற்றொரு இடத்தைப் பகிர்ந்துக் கொண்டிருப்பதும் இராமாயணமே. இந்து மத கடவுளான மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமயணத்தில் இடம்பெற்றுள்ளார் ராமர். நல்ல மகன், சிறந்த அண்ணன், அக்கறையான கணவன் மற்றும் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்க மற்றும் பாராட்டுதலுக்குரிய அரசன் என்று ஒரு மனிதன் எப்படியாக இருக்க வேண்டும் என்று வடிக்கப்பட்ட கதாபாத்திரமாக உருவம் பெற்றிருக்கும் ராமரது குணாதிசயங்கள். இவர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று மீண்டும் வந்து அயோத்தியின் மன்னராக பதிவேற்றார். இந்த வருகையை தான் வடமாநிலத்தவர்கள் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இராமர் சீதையை மணமுடித்தது, வனவாசம் சென்றது, ராவணனுடன் போரிட்டது என்று பல தகவல்கள் நாம் அறிவோம். ஆனால், ராமர் இறப்புக்கு பிறகு அயோத்தி என்ன ஆனது, அந்த நாட்டை ஆண்டது யார் என்று உங்களுக்கு தெயரியுமா?

Recommended