கோஹ்லிக்கு ஓய்வு.. இந்திய அணியின் புதிய கேப்டன்கள் இவர்கள் தான்!- வீடியோ

  • 6 years ago
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லிக்கு பிசிசிஐ ஒருமாதம் ஓய்வு அளித்து இருக்கிறது. கோஹ்லி ஏற்கனவே விடுமுறை கேட்டு பிசிசிஐயிடம் விண்ணப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதால் அவருக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் இலங்கைக்கு எதிராக மீதம் இருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார். இந்த நிலையில் இந்திய அணிக்கு புதிய இரண்டு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெஸ்ட் அணிக்கு தனி கேப்டனும், ஒருநாள் மற்றும் டி-20 அணிக்கு வேறு கேப்டனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோஹ்லி தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அதுவும் கடந்த சில வாரங்களாக இலங்கை தொடர், ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர், மீண்டும் இலங்கை தொடர் என விளையாடி வருகிறார். இந்த நிலையில் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வாரியமான் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

Kohli is playing continuously for last three months. So he has planned to take some rest and if he is rested for the remainder Srilanka series then Rohit Sharma lead limited over series and Rahane will lead one test match

Recommended