ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் ஜெயலலிதா- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஜெயலலிதா குரல் மூலம் வாக்கு சேகரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம், சுயேட்சையாக டிடிவி தினகரன் போன்ற வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்த இடைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, மக்கள் ஆதரவு இந்த அரசுக்கு உள்ளது என்பதை காண்பிக்க அதிமுக நிர்வாகிகள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.அதன் ஒருபகுதியாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஏற்பாட்டில், தொலைபேசி அழைப்பின் மூலம் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஆர்.கே நகரில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் ஜெயலலிதா குரலில் வாக்கு கேட்கும் வாய்ஸ் கால் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





Voters in Radha Krishnan Nagar better known as R K Nagar constituency are receiving calls from 'Amma' Jayalalithaa to vote for E Madhusudanan. The AIADMK led by O Panneerselvam and Edappadi Palanisamy is using an audio recording of the late leader to campaign for their candidate in the upcoming December 21 bypoll.

Recommended