Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Composer: T.A. Kaiyanam
நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ தான் எனக்கருள வேண்டும் முருகா! நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா! வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில் வேழ முகம் படைத்தோன் சோதரனே! சேல் விழி குறமாதின் மணாளனே என் சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே! நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!