எங்கே அவன்.. தேடுகிறார் இசைஞானி

  • 5 years ago
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த
பிறந்த நாள் விழாவில் பேசிய இளையராஜா,

“இன்று இசை அமைப்பாளர் என்று எவருமே இல்லை.
ஒருவர் வருகிறார். ஒரு சிடியை எடுக்கிறார்.
இயக்குனரிடம் கொடுக்கிறார்.
இதை கேளுங்கள்;
எந்த மாதிரி வேண்டும் என சொல்லுங்கள், என்கிறார்.
இவரும் கேட்கிறார்.
பிறகு அதே மாதிரிகூட அல்ல;
அதே இசையை போட்டு கொடுக்கிறார்.
இவர்களா இசை அமைப்பாளர்கள்?”
என்று விளாசினார் இளையராஜா.

இசை அமைப்பாளர் எப்படி மெட்டு போட்டாலும்
அதை கெடுக்காமல் கச்சிதமாக பாடல் எழுதியவர்
உலகத்திலேயே கண்ணதாசன் மட்டும்தான்
என்றும் ராஜா சொன்னார்.

இரு மகன்களின் இசை அமைப்பாளர்களாக இருக்கும்போது
அத்தனை பேரையும் இலையராஜா அடித்து சாய்ப்பது ஏன்
என்று கோலிவுட் தலையை பிய்த்து கொண்டிருக்கிறது.

Recommended