நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுமந்து பகுதியைச் சேர்ந்தவர் குட்டன். 44 வயதான இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிப்பவர். அதில் கிடைக்கும் வருவாயில் மனைவி காயத்ரி, மகன்கள் அமீஷ், லத்தீஷுடன் மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது குட்டனின் வாழ்வு.
உலகையே ஆட்டுவிக்கும் கொரோனா, குட்டனையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த திடீரென பள்ளிகள் மூடப்பட்டதால் இவர் தனது வேலையை இழக்க நேரிட்டது. போதிய வருவாயின்றி குடும்பத்தை நடத்தத் தடுமாறினார்.