தியேட்டர் ஊழியரை தாக்கிய அ.தி.மு.க வினரால் பரபரப்பு-வீடியோ

  • 6 years ago
அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டத்தையும் மீறி படம் திரையிடப்பட்டதால் தியேட்டர் ஊழியரை தாக்கிய அ.தி.மு.க வினரால் பரபரப்பு



தாராபுரத்தில் சர்க்கார் படம் திரையிடபட்டுள்ள தியேட்டர்கள் முன்பாக அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக அறித்திருந்த நிலையில் படம் திரையிடப்பட்டுள்ள எஸ்.வி்.ராம்.தியேட்டர் ,சத்தியா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யபட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. அப்போது தியேட்டர் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் சத்தியா தியேட்டர் வளாகத்திற்குள் புகுந்து அங்கு வைக்கபட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்தெரிந்தனர் . அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .இந்நிலையில் சர்க்கார் படக்காட்சி ரத்து செய்யபட்டதாக அறிவித்த எஸ்.வி.ஆர்.திரையரங்கில் சர்க்கார் படம் திரையிடப்பட்டதாக தகவல் கிடைத்ததால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் எஸ்.வி.ஆர்.திரையரங்குக்குள் புகுந்து சத்தம் போட்டதால் படம் பார்க்கவந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு வெளியேரினர் அப்போது படம் போடவில்லை எனகூறி படத்தை போட்ட தியேட்டர் ஊழியரை அ.தி.மு.க.வினர் தாக்க தொடங்கியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் டிக்கெட் கட்டணத்தை திருப்பி தரவேண்டும் வலியுருத்தியத்தி தியேட்டர் முன்பாக காத்திருக்கின்றனர்

Des: The AIADMK wrecked the theater staff

Recommended