அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!-வீடியோ

  • 6 years ago
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். இதுவரை அவர்கள் கரை திரும்பாததால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஓகி புயல் குறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடாததே காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

Recommended