5வது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை

  • 6 years ago
தெலுங்குத் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர், ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் ராதிகா ரெட்டி (36). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விவாகரத்து மூலம் கணவரைப் பிரிந்த இவருக்கு, 14 வயதில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகன் உள்ளான்.

பெற்றோர் மற்றும் மகனுடன் மூசாப்பேட்டையில் ஐந்து தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ராதிகா வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 10.45 மணியளவில் வழக்கம்போல், பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் ராதிகா. கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை வீட்டினுள் வைத்தவர் நேராக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.

An anchor with a Telugu news channel allegedly committed suicide in Hyderabad late on Sunday night. Radhika Reddy, 36, jumped off the fifth floor of her apartment building in the Moosapet area.

Recommended