சேலத்தில் மருத்துவ சீட் மோசடி..புரோக்கர் கைது- வீடியோ

  • 6 years ago
சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த புரோக்கர் கைது. கல்லூரி உரிமையாளர் உட்பட மேலும் இருவருக்கு வலை


சென்னையைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மகள் அகிலாவிற்கு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தரும்படி திருவள்ளூர் அடுத்த பூண்டியில் உள்ள சந்திரன் என்ற புரோக்கரை அணுகியுள்ளார். 
38 லட்சம் பேரம் பேசி அதில் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் சீட் வாங்கி தராமல் இழுத்தடித்ததால் திருவள்ளூர் எஸ்.பி.,யிடம் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சந்திரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த புரோக்கர் ராமசாமியை கைது செய்த திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் போலிசார் கல்லூரி உரிமையாளர் உட்பட மேலும் இரண்டு பேரை போலிசார் தேடி வருகின்றனர்

TN medical seat fraud: brokers arrested

Recommended