எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் சிக்கி நோயாளியின் உறவினர் பலி- வீடியோ

  • 6 years ago
மும்பையில் உள்ள பிரபல நாயர் மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் சிக்கி நோயாளியின் உறவினர் பலியான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து டாக்டர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு அவர்களை கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இதற்கு முன்பு இத்தகைய சம்பவம் நடந்ததில்லை. எனவே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியான நபரின் பெயர் ராஜேஷ் மரு. இவர் லால்பாக் என்ற பகுதியைச் சேர்ந்தவர். சனிக்கிழமை மாலை இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. நோயாளி ஒருவருக்குத் துணையாக இவர் வந்திருந்தார். எம்.ஆர்.ஐ இயந்திரம் உள்ள அறைக்குள் இவர் வந்தபோது கையில் ஆக்சிஜன் சிலிண்டரையும் எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அந்த ஆக்சிஜன் சிலிண்டரோடு சேர்த்து இவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு மரணத்தைச் சந்தித்துள்ளார்.

சம்பவம் நடந்த நாயர் மருத்துவமனை மும்பை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எம்.ஆர்.ஐ அறைக்குள் உலோகப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளே எடுத்து வரப்பட்டது என்பது குறித்து மாநகராட்சி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

A Patient’s relative sucked into the MRI unit with an Oxygen cylinder and died on the spot at Mumbai's famous Nair Hospital. Police have arrested 3 persons including a Doctor.

Recommended