முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க!- வீடியோ

  • 6 years ago
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலிரவு வாழ்நாளில் மறக்கமுடியாது. அந்த முதலிரவுக்கு முக்கியமாக முகூர்த்தம் குறிப்பார்கள். அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தவே இந்த கட்டுரை. திருமணமான ஆணும் பெண்ணும் இணைவது சாதாரண விசயமல்ல. இன்றைய லிவ் இன் வாழ்க்கையில் இதெல்லாம் தேவையா என்று யோசிப்பவர்களுக்கான கட்டுரை அல்ல. நமக்குப் பின்னர் இந்த உலகத்தில் நாம் விட்டு விட்டு போகக்கூடிய வருங்கால சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை மேற்கொண்டு படிக்கலாம். நல்ல பிள்ளைகளை உருவாக்குவதற்கு நல்ல எண்ணங்களை விதைப்பது அவசியம். அந்த நல்ல பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயற்சி செய்யும் நேரமும் நல்ல நேரமாக இருக்க வேண்டும். உன்னை எல்லாம் எந்த நேரத்தில பெத்தாங்களோ? பேசமா உங்க அம்மா அப்பா அந்த நேரத்தில நல்ல சினிமாவிற்கு போயிருக்கலாம் என்றுதான் நம் பிள்ளைகள் கண்டவர்களிடமும் திட்டு வாங்கும்.

உயிர்கள் இன்றி உலகம் இயங்காது. ஆக இந்த உலகத்தையே இயக்குகின்ற அந்த சிவசக்தி ஐக்கியத்தினை ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

இந்த சாந்தி முகூர்த்தத்தை காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் வைக்கக்கூடாது. இந்த நட்சத்திரங்களில் முதலிரவு மட்டுமல்ல... வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாதாம். கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் ஆகிய மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள் எனப்படுகின்றன. அதேபோல மிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்களாகும். புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரம் உள்ள நாட்களில் சாந்தி முகூர்த்தம் குறிக்கக் கூடாது.



Shanti Muhurtham for First Night during that particular day. There would be no malefic planet in the 7th House from the Muhurtha day. The marriage should not be fixed during the period when Venus (sukra) is afflicted in Transit, since Venus is important planet for Marital Happiness.

Recommended