அது மட்டும் நடந்தால்.. ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு அதிமுக சுக்குநூறாகும்..வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 2வது இடத்தை பிடிப்பார் என்றும், ஆளும் கட்சியான அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்புபடியே தேர்தல் முடிவுகள் அமைந்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் மீண்டும் மோதிக்கொள்ளும் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது தினகரன் தரப்பு.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக 33 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு, 26 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைக்குமாம். அதிமுகவைவிட டிடிவி தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமாம். 28 சதவீதம் வாக்குகளை தினகரன் பெறுவார் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
இப்படித்தான் தேர்தல் முடிவும் வெளியாகும் என்றால், அது அதிமுகவிற்குள் உட்கட்சி பூசலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் களமிறக்கப்பட்டுள்ளார்.

If pre poll survey will come true then AIADMK split may get widen, expecting TTV Dhinakaran faction.

Recommended