ஜெ. சமாதிக்கு அதிகாலையில் வந்த தல, ஓராண்டாகியும் நேரில் அஞ்சலி செலுத்தாத கமல்...வீடியோ

  • 6 years ago

ஜெயலலிதா இறந்த போது நடிகர் அஜித் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் சென்னை திரும்பியவுடன் அதிகாலையில் ஜெ. சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ஓராண்டாகியும் ஜெயலலிதா சமாதியில் நடிகர் கமல் அஞ்சலி செலுத்தவில்லை. இவர்கள் இன்று சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிசம்பர் 5 கடந்த ஆண்டு இதே நாளில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்பலோவின் அறிக்கைக்காக காத்திருந்தனர் தமிழக மக்கள். நிலைமை சற்று மோசம் என்று சொல்லி வந்த அப்பலோ மருத்துவமனை இறுதியில் இரவு 11 மணியளவில் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அறிவித்தது.

ஜெயலலிதா மரணமடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சியில் தவித்தனர். வன்முறை வெடிக்கும் என்று போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் லேசான கோஷங்களைத் தவிர மக்கள் அமைதியே காத்தனர். ஜெயலலிதாவின் திடீர் மறைவு அனைவரையும் உறைய வைத்தது என்று கூட சொல்லலாம்.
தமிழகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க சென்னை நகரின் சாலைகள் எல்லாம் வெறிச்சோடி வாகனங்கள் இயக்கப்படாமல் மயான அமைதியோடு இருந்தது. சென்னை ஓமந்தூரார் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

Will Kamalhaasan pay tribute to Jayalalitha at her memorial as one year passed he didnot paid tribute to her in person and also fans were waiting will Ajith come to pay tribute to Jayalalitha.

Recommended