கடத்தி கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் இல்லத்திற்கு ப.சிதம்பரம் நேரில் சென்று அஞ்சலி

  • 6 years ago
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பாளையக்காட்டை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சகோதரியின் மருமகன் ஆவார். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த சிவமூர்த்தி 3 நாட்களுக்கு முன்பு மாயமானார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் காரமடையில் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளால் ஓசூர் நெடுஞ்சாலை அருகே ஏரியில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. கொலையாளிகள் 4 பேரை கைது செய்து போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட சிவமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சிவமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சிவமூர்த்தியின் உடல் ஆத்துபாளையம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended