சேரனின் 'பாரதி கண்ணம்மா' சொன்ன பாடம்!

  • last year
கட்டுரையாளர் : வி.ராம்ஜி :

‘பாரதி கண்ணம்மா’: சாதி வெறியையும், மென் காதலையும் பேசிய சேரன் காவியம்!

1997-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் நன்னாளில் திரைக்கு வந்தது ’பாரதி கண்ணம்மா’, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பார்த்தவர்கள் அனைவருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 26 வருடங்களாகிவிட்டன. சேரனின் முதல் படைப்பாக வெளிவந்த ‘பாரதி கண்ணம்மா’ மிகப்பெரிய சேர ராஜ்ஜியத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்குவதற்கு அச்சாரம் போட்டது. விதையென ஊன்றி, வேர்விட்டுப் பரவி, பெருமரமென சேரனின் யதார்த்த திரையுலகம், தனித்த சாம்ராஜ்ஜியமாகவும் உருவாகியிருக்கிறது. அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் சேரன்.

யதார்த்த சினிமாவை, ஒரு கவிதை அல்லது சிற்பம் போல வடித்தெடுத்த சேரனின் ‘பாரதி கண்ணம்மா’வை எத்தனை முறை பார்த்தாலும் மனசு கனமாகும்; ரணமாகும்!