டிஜிட்டல் இந்தியாவின் அவல நிலை; பிரதிபலிக்கும் ராமநாதபுரம்; திட்டி தீர்க்கும் மக்கள்!

  • 2 years ago
ராமநாதபுரம் நகராட்சி பொது நிதியில் இருந்து 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டது, கட்டப்பட்ட சில நாட்கள் மட்டுமே திறந்திருந்த கழிப்பறை இதுவரை திறக்கப்படாத நிலையில் அப்பகுதி முழுவதும் வியாபாரிகள், அப்பகுதியில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் கழிப்பிட வசதி இல்லாமல் அப்பகுதி ஓரங்கள் முழுவதும் அசுத்தம் செய்து வருகின்றனர், இப்பகுதியில் தான் கால்நடை மருத்துவமனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் செல்லும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகளின் பேருந்து நிறுத்தங்களும் அவ்விடத்தில் தான் உள்ளது, அப்பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் அப்பாதையைக்கடக்கும் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மூக்கை மூடிக் கொண்டு, முகத்தை சுளித்துக் கொண்டு, மூத்திர வாடை துர்நாற்றத்தால் அவதி படும் நிலை தொடர்ந்து வருகிறது

Recommended