ஜாலி.... ஜாலி... குளிக்க போறேனே... சேற்றில் ஆனந்த குளியலில் யானை அகிலா...!

  • 2 years ago
இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படி கோயில் உள்ள நாச்சியார் தோப்பில் ஏற்கனவே இருந்து வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில் குளிப்பதற்காக புதியதாக 1200 சதுரடியில் சேற்றுக் குளியல் குளம் அமைக்கப்பட்டுள்ளது ரூ50,000 மதிப்பில் களிமண், செம்மண் , மணல் ஆகியவைகள் சுமார் ஒன்றரை அடி உயரம் கொட்டப்பட்டு உள்ளது இதில் உப்பும் சேர்க்கப்பட்டுள்ளது ,இன்று அந்த களிமண்ணில் நீர் நிரப்பப்பட்டது அதனைத் தொடர்ந்து யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள் இறக்கப்பட்டது இந்த சேற்று குளியலை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த யானை அகிலா சேற்றுக்குள் தனது துதிக்கையால் அடித்து விளையாண்டு சேற்றை அள்ளி தன்மீது போட்டுக்கொண்டது.

Recommended