_பந்தல் சாகுபடியில் நிறைவான வருமானம்_ - அசத்தும் விவசாயி!

  • 3 years ago
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, கல்லகம் கிராமத்தில் இருக்கிறது செல்வதுரை-கோமதி தம்பதியின் தோட்டம். தோட்டத் துக்குள் நுழைந்தபோது நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். முதலில் பேசத் தொடங்கிய செல்வதுரை, ‘‘கல்தூண் அமைச்சு இரண்டரை ஏக்கர்ல பந்தல் சாகுபடி செஞ்சு நிறைவான வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கோம். இவ்வளவு பெரிய பரப்புல பந்தல் சாகுபடி செய்றது எல்லாம், எங்க பகுதியில கற்பனை கூடச் செஞ்சு பார்க்க முடியாத காரியம். இதுக்கு பசுமை விகடனும் கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவோட வழிகாட்டுதலும்தான் முழுக்க முழுக்கக் காரணம். இந்த உதவியை நாங்க வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்.