வீடு வீடாக பணம், வேட்டி,சேலை விநியோகம் – அதிமுக,திமுக மோதல்
  • 3 years ago
தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரியில் வீடு வீடாக பணம், வேட்டி, சேலை கொடுத்த அ.தி.மு.க-வினரை, தி.மு.க-வினர் தடுக்க முயன்றதால் மோதல் எற்பட்டது.

உதகை 36 வார்டில் நேற்று மாலை அ.தி.மு.க-வினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பணம் மற்றும் வேட்டி, சேலை கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க-வினர் அங்கு சென்று அ.தி.மு.க-வினரை தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அ.தி.மு.க-வினர் செயலை கண்டித்து தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Recommended