விவசாயிகள் தற்கொலையைக் குறைத்த விஞ்ஞானி! #Farmers Suicide #Telangana

  • 4 years ago
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஆதரவோடும், சில ஆலோசனைகளோடும் செயல்படத் தொடங்கிய ஒரு தன்னார்வ அமைப்பு தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள நீடித்த வேளாண்மைக்கான மையம்(சி.எஸ்.ஏ). இம்மையத்தின் இயக்குநர் வேளாண் விஞ்ஞானி ராமனாஞ்சநேயலு. இந்திய அளவில் விவசாயம் சம்பந்தமாக முன்னெடுக்கும் கூட்டங்கள், கருத்தரங்குகளில் இயற்கை விவசாயம், பாதுகாப்பான உணவு, ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து களம், பேச்சு, எழுத்து என தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். தெலங்கானாவில் உள்ள எனபாவி கிராமத்தில் விவசாயிகளின் தற்கொலைகளை குறைக்க பெரும்ப பங்காற்றியுள்ளார்.

வேளாண் விஞ்ஞானி ராமனாஞ்சநேயலு
தொடர்புக்கு 90006 99702
Email: csa@csa-india.org

Recommended