பள்ளிகொண்டாவில் தமிழ்நாடு மின்சார வாரிய மின் கணக்கீட்டு அட்டையில் மத பிரச்சாரம்

  • 5 years ago
வேலூர்மாவட்டம்,பள்ளிகொண்டாவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் அலுவலகம் உள்ளது இதில் மக்களிடம் மின் கணக்கீட்டு அட்டை வழங்கபட்டதற்கு மத பிரச்சாரம் வாசகங்களுடன் மத பிரச்சாரத்தை செய்யும் வகையில் மின் அளவீட்டு அட்டையில் அச்சிட்டு நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு துறையில் வழங்கப்படும் இந்த அட்டையில் மத பிரச்சாரம் இருந்ததால் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்து முன்னணியின் உதவியோடு அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர் ஆர்பாட்டம் நடத்தவும் முயன்றனர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினரிடம் காவல்துறையினர் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மத பிரச்சாரம் செய்யும் வகையில் அச்சிடப்பட்ட அட்டைகளை திரும்ப பெறுவதாகவும் அவ்வாறு அச்சிட்டு வழங்கிய அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் இந்த திடீர் போராட்டத்தால் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Electricity Board Office blocked the police as a religious campaign on the Tamil Nadu Electricity Board's Electrical Accounting Card in Pallikonda

#Pallikonda
#TNEB

Recommended