ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மே 23-ஆம் தேதிக்கு பிறகு அறிவிப்பார்- ரஜினி சகோதரர்- வீடியோ
  • 5 years ago
திருச்சியில் கட்டப்பட்டுள்ள ரஜினிகாந்தின் பெற்றோரின் மணிமண்டப கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்...ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மே 23-ஆம் தேதிக்கு பிறகு அறிவிப்பார். ஒரு நல்ல முடிவை அவர் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அரசியலுக்கு வருவது காலதாமதம் ஆவது நல்லதுக்கு தான். அரசியல் சூழ்நிலையை அவர் உற்று நோக்கி வருகிறார். நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் எனக் கூறினார்.

DES : Rajini's brother about rajini political entry.
Recommended