ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

  • 6 years ago
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொருவரின் சிறந்த குணாதிசயங்கள், தொலைநோக்குப் பார்வை போன்றவை ஆசிரியர்கள் அளிக்கும் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தே கிடைப்பதாக தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரின் விலைமதிப்பில்லாத பங்களிப்பானது, சமூகத்தாலும், மாநிலத்தாலும் இந்நாளில் அங்கீகரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சமூகத்தை தகவமைப்பதில் பெரும் பங்கினை அளித்து வரும் ஆசிரியர்களுக்கு மரியாதையையும், மதிப்பையும் அளித்திடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Recommended