தனியார் காப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலும் ஒருவர் கைது
  • 6 years ago
சென்னை வில்லிவாக்கம் முருகேசன் நகரில் வசிப்பவர் ஜேக்கப் விமலா தம்பதியினர். இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயிலில் கடந்த 20 வருடங்களாக காப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இங்கு ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் காப்பக மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் அம்பத்தூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி அனிதா ஆனந்த் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது காப்பகத்தில் விடுதி காப்பாளர்கள் பாலியல் தொந்தரவு செய்வதுடன், அடித்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் சென்று விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல் துறையினருடன் காப்பகத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ள மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர் விமலா, கணவர் ஜேக்கப், காப்பாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மற்றொரு விடுதி காப்பாளர் சாமுவேலை ஆவடி மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Recommended