கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய அணி அபார வெற்றி

  • 6 years ago
கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் கென்யா அணியை இந்தியா அணி வீழ்த்தி புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் துவக்கத்திலிருந்தே இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 18-9 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இந்திய அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் இந்திய அணி 41-17 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மேலும் இந்திய அணி, இன்று நடைபெற உள்ள தனது அடுத்த லீக் ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்கிறது.



Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended