இந்தியத் தாய் பெற்றெடுத்த திரு மகன்களில் மிக முக்கியமான ஒருவர் சுவாமி விவேகானந்தர். இதனால் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். 1902ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகை ஈர்க்க சென்ற சுவாமி விவேகானந்தரின் 116வது நினைவு தினம் இன்று. ஒரு நூற்றாண்டு கடந்தபோதிலும், அவர் இளைஞர்களின் உந்து விசையாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார். விவேகானந்தர் எப்படி இறந்தார் என்பது பற்றி சில தகவல்கள் இங்கே..