கட்சியை பலப்படுத்தி வருகிறேன்- சரத்குமார் பேட்டி- வீடியோ

  • 6 years ago
பராளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தி வருவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பெருபான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பது தன் கருத்து என்றார். தமிழகத்தில் மணல் திருட்டு நடை பெறுவதால் மண் வளம் நீர்வளம் குறைந்து தண்ணீருக்காக போர் ஏற்படும் நிலை உருவாகி வருவதாக கூறினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தன் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்தார்.

des : Sarath Kumar said that strengthening the party for the parliamentary elections.

Recommended