ராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை- வீடியோ

  • 6 years ago
ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி பேருதவியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார். சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றிய போது கூறியதாவது : 10வது ராணுவ கண்காட்சி இது, சிலர் இந்த கண்காட்சியை இதற்கு முன்னர் கண்டிருப்பீர்கள். ஆனால் நான் இப்போது தான் முதன்முறையாக ராணுவ கண்காட்சியில் பங்கேற்கிறேன். சோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் மண்ணில் ராணுவ கண்காட்சி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

India is showing development in defence weapons production within country and soon it will export high class weapons to world countries.

Recommended