வெளியே வந்து எம்ஜிஆரை போல கூட்டம் கூட்டுவேன்- சசி சபதம்- வீடியோ

  • 6 years ago
சிறையில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆரைப் போல கூட்டம் கூட்டி காட்டுவேன்.. நமக்கான நேரம் வந்தே தீரும் என தஞ்சாவூர் விளார் வீட்டில் உறவினர்களிடம் சசிகலா கூறியுள்ளார். சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 20-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, 15 நாள் பரோல் விடுப்பில் வந்திருக்கிறார் சசிகலா. அவர் வந்த வழியெங்கும் பொதுமக்களை நிறுத்தியும் கார்களை அணிவகுக்க வைத்தும் அதகளப்படுத்தினர் செந்தில் பாலாஜியும் பழனியப்பனும். இந்த அணிவகுப்பு மரியாதையை சசிகலா விரும்பவில்லை. இந்தக் கோபத்தை தினகரனிடம் வெளிப்படுத்தினார்.

Sources said that Sasikala who got Parole for husband's funeral is vowing to take over the AIADMK.

Recommended