தேவைப்பட்டால் நானே அரசியலில் குதிப்பேன்... எடப்பாடிக்கு சசிகலா கணவர் நடராஜன் வார்னிங்!
  • 6 years ago
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றாவிட்டால் அவரை மாற்ற நான் அரசியல் களத்தில் இறங்க தயங்க மாட்டேன் என்று ம. நடராஜன் தெரிவித்துள்ளார். சசிகலாவிடம் இதற்கான ஒப்புதலை வாங்கி அரசியல் களத்தில் குதிப்பேன் என்றும் நடராஜன் கூறியுள்ளார். தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது : ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைத்ததே தவறு.

மக்களுக்கு பல சந்தேகங்கள் எழும் ஆணையம் அமைத்ததால் ஜெயலலிதா மரணத்தில் என்ன தெளிவை பெற்றுவிட்டார்கள், நாளையே ஆணையம் தீர்ப்பு தந்தாலும் அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதாவின் உழைப்பில் 2016ல் வந்தது அதிமுக அரசு, எனவே அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்றே சசிகலா விரும்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நீடிப்பாரா என்பதில் தான் சசிகலா மாறுபட்டிருக்கிறார். இந்த அரசின் செயல்பாடு மக்கள் விரோத செயல்பாடு என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது : ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைத்ததே தவறு. மக்களுக்கு பல சந்தேகங்கள் எழும் ஆணையம் அமைத்ததால் ஜெயலலிதா மரணத்தில் என்ன தெளிவை பெற்றுவிட்டார்கள், நாளையே ஆணையம் தீர்ப்பு தந்தாலும் அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை.

Sasikala's husband Natarajan says that he will enter into politics if Palanisamy not change his attitude, and he wish the admk government will continue rather Palanisamy as CM.
Recommended