கவுரி லங்கேஷ் போல மற்றொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டம்- வீடியோ

  • 6 years ago
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி அடுத்து இன்னொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்.

தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியமான குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Recommended